தேவையான பொருட்கள்
- கத்தரிக்காய்
- துவரம் பருப்பு
- தக்காளி
- புளி
- காய்ந்த மிளகாய்
- சின்ன வெங்காயம்
- சீரகம்
- பூண்டு
- மஞ்சள் தூள்
- பெருங்காயத்தூள்
- நல்லெண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
குக்கரில், ஒரு டம்ளர் துவரம் பருப்பு, பொடியாக நறுக்கிய இரண்டு கத்தரிக்காய், நெல்லிக்காய் அளவு புளி, இரண்டு தக்காளி, மூன்று டம்ளர் தண்ணீர், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், இரண்டு பல் பூண்டு சேர்த்து இரண்டு விசில் விடவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், 1/4 கப் சின்ன வெங்காயம், ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், வேக வைத்துள்ள பருப்பு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து, பின் மசித்து கொள்ளவும்.
