தேவையான பொருட்கள்
- கம்பு மாவு
- தேங்காய்
- பெரிய வெங்காயம்
- கேரட்
- பீன்ஸ்
- பச்சை பட்டாணி
- பச்சை மிளகாய்
- கடலைப்பருப்பு
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- சோம்பு
- முந்திரி
- நெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், ஒரு கப் கம்பு மாவு சேர்த்து ஐந்து நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், தேவையான அளவு உப்பு, 1/4 கப் துருவிய தேங்காய், 20 கிராம் முந்திரி, இரண்டு ஸ்பூன் நெய், 1/4 கப் வெந்நீர் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர், இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் நெய், 1/2 ஸ்பூன் சோம்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி மூன்றும் சேர்த்து 1/2 கப், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின்னர், 1/2 டம்ளர் தண்ணீர், 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டியவுடன், வேக வைத்துள்ள புட்டு மாவை பொடித்து விட்டு இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
