தேவையான பொருட்கள்
- மீந்து போன சாதம்
- தக்காளி
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கடலைப்பருப்பு
- மஞ்சள் தூள்
- கறி மசாலா தூள்
- சோம்பு
- இஞ்சி
- பூண்டு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன், நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய மூன்று தக்காளி, ஒரு ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு கப் மீதமான சாதம், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
