தேவையான பொருட்கள்
- பச்சைப்பயிறு
- தட்டைப்பயிறு
- கொள்ளு பருப்பு
- கருப்பு சுண்டல்
- சின்ன வெங்காயம்
- தக்காளி
- தனியா தூள்
- சீரகம்
- காய்ந்த மிளகாய்
- தேங்காய்
- புளி
- மஞ்சள் தூள்
- கத்திரிக்காய்
- உருளைக்கிழங்கு
- நல்லெண்ணெய்
- கடுகு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
- பெருங்காயத்தூள்
செய்முறை
முதலில், 50 கிராம் பச்சைப்பயிறு, 50 கிராம் தட்டைப்பயிறு, 50 கிராம் கொள்ளு பருப்பு மற்றும் 50 கிராம் கருப்பு சுண்டல் சேர்த்து ஆறு மணி நேரங்கள் ஊற வைக்கவும்.
பின், ஊற வைத்துள்ள பயிறை முளைக்கட்டி வைத்து குக்கரில் போட்டு ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஒரு கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய், 50 கிராம் சின்ன வெங்காயம், இரண்டு தக்காளி, ஆறு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இரண்டு ஸ்பூன் தனியா தூள், ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். ஆறிய பின் அரைக்கவும்.
மற்றொரு கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, பத்து சின்ன வெங்காயம், இரண்டு காய்ந்த மிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
100 கிராம் கத்தரிக்காய் மற்றும் 100 கிராம் உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.
1/4 கப் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதிக்க தொடங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, தயார் செய்து வைத்துள்ள முளைக்கட்டிய பயிறு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
இறுதியாக 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
