தேவையான பொருட்கள்
- கடலைப்பருப்பு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கடலை மாவு
- இஞ்சி
- பூண்டு
- சோம்பு
- பெருங்காயத்தூள்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து 1/4 கப் கடலைப்பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின், ஊற வைத்துள்ள கடலை பருப்புடன் சிறிதளவு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, 1/2 ஸ்பூன் சோம்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
அரைத்து வைத்துள்ள பருப்புடன், 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், மூன்று பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, எடுத்து வைத்துள்ள கடலைப்பருப்பு, நான்கு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
