தேவையான பொருட்கள்
- அவல்
- சர்க்கரை
- ஏலக்காய்
- முந்திரி
- உலர் திராட்சை
- நெய்
செய்முறை
கடாயில், 1/2 கப் சர்க்கரை, ஒரு கப் அவலை தண்ணீரில் நனைத்து தண்ணீரை வடித்து விட்டு சேர்த்து, மேலும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து சர்க்கரை உருகும் வரை நன்கு கலந்து விடவும்.
பின், நெய்யில் வறுத்த 25 கிராம் முந்திரி மற்றும் உலர் திராட்சை, இரண்டு தட்டிய ஏலக்காய் சேர்த்து இறுகி உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வரும் வரை நன்கு கலந்து விடவும்.
ஆறிய பின், சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
