தேவையான பொருட்கள்
- மீன்
- சின்ன வெங்காயம்
- தக்காளி
- மிளகாய் தூள்
- தனியா தூள்
- மஞ்சள் தூள்
- காய்ந்த மிளகாய்
- புளி
- வெந்தயம்
- பெருங்காயத்தூள்
- நல்லெண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் வெந்தயம், நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர், 1/2 கப் புளிக்கரைசல், 1/2 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
அதனுடன், 200 கிராம் மீன் சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைத்து சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி விடவும்.
