தேவையான பொருட்கள்
- கருவாடு
- சின்ன வெங்காயம்
- பெரிய வெங்காயம்
- தேங்காய்
- தக்காளி
- இஞ்சி
- பூண்டு
- சீரகம்
- தனியா தூள்
- மஞ்சள் தூள்
- வெந்தய பொடி
- வெந்தயம்
- புளி
- காய்ந்த மிளகாய்
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
செய்முறை
முதலில், கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய், இரண்டு ஸ்பூன் சீரகம், 100 கிராம் சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், நான்கு ஸ்பூன் தனியா தூள், 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். ஆறிய பின், சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் வெந்தயம், நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
மேலும், 1/4 கப் புளிக்கரைசல் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின்னர், அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது, ஒரு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின், 1/4 கப் சுத்தம் செய்த கருவாடு சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
மேலும், 1/4 ஸ்பூன் வெந்தய பொடி, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
