தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு
- கடலைப்பருப்பு
- வாழைப்பூ
- சோம்பு
- மஞ்சள் தூள்
- காய்ந்த மிளகாய்
- பெருங்காயத்தூள்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
பாத்திரத்தில், 1/2 கப் துவரம் பருப்பு, 1/2 கப் கடலைப்பருப்பு, தேவையான அளவு காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து விட்டு, தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின், அரைத்து வைத்துள்ள பருப்பை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து ஆறிய பின், பொடித்துக் கொள்ளவும்.
கடாயில், 25 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், 1/2 ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து பொரிந்ததும், 1/2 கப் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, 1/4 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்கவும்.
பின்னர், தயார் செய்து வைத்துள்ள பருப்பு சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு கலந்து விடவும்.
இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
