தேவையான பொருட்கள்
- வறுத்த வேர்க்கடலை
- புளி
- சாம்பார் தூள்
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- பூண்டு
- வெந்தயம்
- கறிவேப்பிலை
- நல்லெண்ணெய்
- உப்பு
செய்முறை
முதலில், ¼ கப் தோல் நீக்கிய வறுத்த வேர்க்கடலை, ¼ டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் வெந்தயம், பொடியாக நறுக்கிய 5 பல் பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ½ கப் புளிக்கரைசல், 1½ ஸ்பூன் சாம்பார் தூள், ½ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்.
பின், அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
