தேவையான பொருட்கள்
- பாசிப்பருப்பு
- தக்காளி
- பெரிய வெங்காயம்
- தேங்காய்
- சீரகம்
- பச்சை மிளகாய்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், ¼ கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு பச்சை மிளகாய், ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின், வேக வைத்து மசித்த ¼ கப் பாசிப்பருப்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, தேவையான அளவு உப்பு, ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
