தேவையான பொருட்கள்
- முருங்கைக்காய்
- சின்ன வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- பூண்டு
- தக்காளி
- புளிக்கரைசல்
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- மிளகு
- சீரகம்
- கடுகு
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை, பத்து சின்ன வெங்காயம், இரண்டு காய்ந்த மிளகாய், ஆறு பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், 1½ ஸ்பூன் ஒன்றிரண்டாக உடைத்த மிளகு சேர்த்து வதக்கவும்.
பின், நறுக்கிய இரண்டு முருங்கைக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பின்னர், ¼ டம்ளர் புளிக்கரைசல், ஒரு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
