இட்லி குருமா


தேவையான பொருட்கள்

  • பெரிய வெங்காயம்
  • தக்காளி 
  • இஞ்சி-பூண்டு விழுது
  • தேங்காய் 
  • முந்திரி 
  • மிளகாய் தூள் 
  • மல்லித்தூள் 
  • கரம் மசாலா 
  • கடுகு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை

முதலில், ½ கப் தேங்காய், ஐந்து முந்திரி விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.‌

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ¼ ஸ்பூன் கடுகு, நீளமாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

பின், இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், ½ ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.‌

பின்னர், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கத் தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தி சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும். 
Previous Post Next Post