தேவையான பொருட்கள்
- புளி
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- காய்ந்த மிளகாய்
- நல்லெண்ணெய்
- வெந்தயம்
- கடுகு
- உப்பு
- தேங்காய்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- கருவேப்பிலை
- கொத்தமல்லி
செய்முறை
50 கிராம் புளியை, 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் 1 ஸ்பூன் கடுகு, 1 ஸ்பூன் வெந்தயம், ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய், இதனுடன் நீளமாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
இதனுடன் சிறிதாக நறுக்கிய இரண்டு தக்காளி சேர்க்கவும்.
தக்காளி நன்கு வதங்கிய பின், கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்க்கவும். 2 ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பின்னர், 1 கப் அரைத்த தேங்காய் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
