தேவையான பொருட்கள்
- தேங்காய்
- இஞ்சி
- பூண்டு
- சோம்பு
- பச்சை மிளகாய்
- காய்ந்த மிளகாய்
- கேரட்
- பீன்ஸ்
- பச்சைப் பட்டாணி
- முந்திரி
- எண்ணெய்
- கருவேப்பிலை
- கொத்தமல்லி
- உப்பு
- கடுகு
- பெரிய வெங்காயம்
செய்முறை
ஒரு கப் துருவிய தேங்காய், சிறிதளவு இஞ்சி, 1 பல் பூண்டு, 1 ஸ்பூன் சோம்பு, 2 பச்சை மிளகாய், மற்றும் 1/2 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்தப் பின் தேங்காய் சாரை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் 1 ஸ்பூன் கடுகு சேர்த்து அதனுடன் 2 காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, மற்றும் 1 பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
1 கப் கேரட், பீன்ஸ், மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து எண்ணெயில் வதக்கவும். வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் சாரை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
1 கப் சாதம் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
