தேவையான பொருட்கள்
- பாகற்காய்
- கடலை மாவு
- சோள மாவு
- அரிசி மாவு
- மிளகாய் தூள்
- சில்லி பொடி
- மஞ்சள் தூள்
- தனியா தூள்
- உப்பு
- எண்ணெய்
- கொத்தமல்லி இலை
செய்முறை
200 கிராம் பாகற்காயை மெல்லிசான துண்டுகளாக நறுக்கி ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் தயார் செய்து வைத்துள்ள பாகற்காய், இரண்டு ஸ்பூன் கடலை மாவு, நான்கு ஸ்பூன் சோள மாவு, இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சில்லி பொடி, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
