தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு
- அரிசி
- உப்பு
செய்முறை
அடி கனமான பாத்திரத்தில், ஒரு கப் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும், இதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து சாதம் கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து சாதம் முக்கால்வாசி வெந்தவுடன், இரண்டு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து கைவிடாமல் இறுகும் வரை நன்கு கிளறி விடவும்.
இறுகி வந்தவுடன் தேவைக்கேற்ப உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
