தேவையான பொருட்கள்
- மோர்
- பூசணிக்காய்
- தேங்காய்
- கடலைப்பருப்பு
- காய்ந்த மிளகாய்
- பச்சை மிளகாய்
- சீரகம்
- எண்ணெய்
- உப்பு
- பெருங்காயத்தூள்
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து அதனுடன் ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு காய்ந்த மிளகாய், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்த உடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை, 1/2 கப் பொடியாக நறுக்கிய பூசணிக்காய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
இறுதியாக ஒரு கப் மோர், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
