தேவையான பொருட்கள்
- மரவள்ளி கிழங்கு
- உளுந்து பருப்பு
- வெந்தயம்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
- சோம்பு
- எண்ணெய்
செய்முறை
1/2 கப் உளுந்து பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து அதனுடன் பொடியாக நறுக்கிய மரவள்ளி கிழங்கு ஒரு கப், ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் சோம்பு, தேவையான அளவு உப்பு, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
இதனுடன் இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
