தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு
- பீட்ரூட்
- கேரட்
- பீன்ஸ்
- பச்சை பட்டாணி
- இஞ்சி-பூண்டு விழுது
- மஞ்சள் தூள்
- கறி மசாலா தூள்
- பச்சை மிளகாய்
- பெரிய வெங்காயம்
- சோம்பு
- மிளகாய் தூள்
- கடலை மாவு
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி மசித்துக் கொள்ளவும்.
மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன், 1/4 கப் துருவிய பீட்ரூட், 1/4 கப் துருவிய கேரட், 1/4 கப் பொடியாக நறுக்கிய பீன்ஸ், 1/4 கப் வேக வைத்த பச்சை பட்டாணி, ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, நான்கு ஸ்பூன் கடலை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
பிசைந்து வைத்துள்ள மசாலாவை சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
