தேவையான பொருட்கள்
- வாழைப்பூ
- கடலைப்பருப்பு
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- தக்காளி
- தேங்காய்
- சோம்பு
- மஞ்சள் தூள்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
50 கிராம் கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் சோம்பு, நான்கு காய்ந்த மிளகாய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம் மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
ஒரு கப் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, வேக வைத்துள்ள கடலைப்பருப்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய், 1/2 டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
