தேவையான பொருட்கள்
- பச்சை பட்டாணி
- சீரக சம்பா அரிசி
- தக்காளி
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- இஞ்சி-பூண்டு விழுது
- பட்டை
- சோம்பு
- லவங்கம்
- ஏலக்காய்
- பிரியாணி இலை
- பிரியாணி மசாலா பொடி
- கறி மசாலா தூள்
- தயிர்
- கொத்தமல்லி இலை
- புதினா
- உப்பு
- எண்ணெய்
- நெய்
செய்முறை
குக்கரில், 20 மில்லி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் சோம்பு, பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஒரு ஏலக்காய், ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின், மூன்று தக்காளி, ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும்.
இதனுடன், 100 கிராம் பச்சை பட்டாணி, இரண்டு ஸ்பூன் தயிர், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின்னர், இரண்டு டம்ளர் அரிசி (1/2 மணி நேரம் ஊற வைத்து), நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.
இறுதியாக, தேவையான அளவு நெய் சேர்த்து கலந்து விடவும்.
