தேவையான பொருட்கள்
- பிரட்
- ரவை
- கேரட்
- முந்திரி
- சர்க்கரை
- நெய்
- பால்
- சமையல் சோடா
செய்முறை
ஐந்து பிரட் துண்டை எடுத்து நான்கு புறமும் ஓரங்களை நீக்கிவிட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.
பின், கடாயில் நான்கு ஸ்பூன் நெய், 1/4 கப் ரவை, பொடித்து வைத்துள்ள பிரட் சேர்த்து வறுக்கவும்.
அதனுடன் 1/4 கப் துருவிய கேரட், பத்து முந்திரி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆறிய பின், தேவையான அளவு சர்க்கரை, 1/4 ஸ்பூன் சமையல் சோடா, தேவையான அளவு பால் சேர்த்து கலந்து கொள்ளவும். தோசை மாவு பதத்தில் இருந்து இறுக்கமாக இருக்க வேண்டும்.
இறுதியாக, இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.
