தேவையான பொருட்கள்
- பூசணிக்காய்
- மிளகுத்தூள்
- சீரகத்தூள்
- சோள மாவு
- கறி மசாலா தூள்
- மஞ்சள் தூள்
- உப்பு
செய்முறை
ஒரு கப் பொடியாக நறுக்கிய பூசணிக்காய், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின், பாத்திரத்தில் வடிகட்டி வைத்துள்ள பூசணிக்காய் சாறு, ஒரு டம்ளர் தண்ணீர், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
ஒரு ஸ்பூன் சோள மாவை 1/4 டம்ளர் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். மேலும், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின்னர், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் சீரகத்தூள், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
