தேவையான பொருட்கள்
- சுரைக்காய்
- தேங்காய்
- தக்காளி
- பெரிய வெங்காயம்
- சீரகம்
- தனியா தூள்
- மஞ்சள் தூள்
- பச்சை மிளகாய்
- புளி
- சாம்பார் பொடி
- மிளகாய் தூள்
- கடுகு
- வெந்தயம்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- நல்லெண்ணெய்
செய்முறை
கடாயில், இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் தனியா தூள் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன், 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
மற்றொரு கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
ஒரு கப் தோல் சீவி பொடியாக நறுக்கிய சுரைக்காய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின், 1/4 டம்ளர் புளி கரைசல், அரைத்து வைத்துள்ள மசாலா, தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும்.
இறுதியாக, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
