காஞ்சிபுரம் இட்லி


தேவையான பொருட்கள் 

  • இட்லி அரிசி 
  • பச்சரிசி 
  • உளுந்து பருப்பு 
  • வெந்தயம் 
  • முந்திரி 
  • மிளகு 
  • சீரகம் 
  • பெருங்காயத்தூள் 
  • சுக்குப்பொடி 
  • நெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 

செய்முறை 

ஒரு கப் இட்லி அரிசி, ஒரு கப் பச்சரிசி, 1/3 கப் உளுந்து பருப்பு, நான்கு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைத்து இட்லி மாவு பதத்திலிருந்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு 5 மணி நேரம் வைக்கவும். 

பின், கடாயில், நான்கு ஸ்பூன் நெய், இரண்டு ஸ்பூன் உடைத்த மிளகு, இரண்டு ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், 1/4 ஸ்பூன் சுக்குப்பொடி, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும் . மேலும், 25 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து விடவும். 

பின், ஒரு சின்ன கப்-ல் வாழை இலை வைத்து, அதில் பாதி அளவுக்கு தயார் செய்து வைத்துள்ள மாவு ஊற்றி, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து தயார் செய்து வைத்துள்ள கப்பை அதனுள் வைத்து வேக வைக்கவும். தண்ணீருள் மூழ்காமல் வைக்கவும்.
Previous Post Next Post