தேவையான பொருட்கள்
- பேரிச்சம்பழம்
- முந்திரி
- உலர் திராட்சை
- பாதாம்
- நாட்டுச் சர்க்கரை
- பால்
- நெய்
செய்முறை
முதலில், 50 கிராம் பேரிச்சம்பழம், 1/2 டம்ளர் பால் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில், அரைத்த பேரிச்சம்பழம், 50 கிராம் நாட்டுச் சர்க்கரை, 1/2 டம்ளர் பால் சேர்த்து இறுகும் வரை கலந்து விடவும்.
பின், 1/4 கப் முந்திரி, உலர் திராட்சை, பாதாம் (மூன்றும் சேர்த்து 1/4 கப்) சேர்த்து கலந்து விடவும்.
பின்னர், நெய் தடவிய தட்டில் தயார் செய்து வைத்துள்ள கலவையை ஊற்றி, ஆறிய பின் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
