தேவையான பொருட்கள்
- சப்பாத்தி
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- கறி மசாலா தூள்
- சிக்கன் மசாலா தூள்
- மட்டன் மசாலா தூள்
- மஞ்சள் தூள்
- இஞ்சி-பூண்டு விழுது
- சோம்பு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மட்டன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து வதக்கவும்.
பின், சிறிய துண்டுகளாக நறுக்கிய நான்கு சப்பாத்தி, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு கலந்து விடவும்.
இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
