1) தாளிக்கும் பொழுது ஒரு தக்காளி பொடியாக நறுக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும்.
2) பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் இரண்டும் சேர்த்தால் உப்புமா சுவையாக இருக்கும்.
3) வதக்கும் பொழுது பொடியாக நறுக்கிய ஒரு ஸ்பூன் இஞ்சி சேர்த்தால் நன்கு மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
4) கோதுமை ரவா உப்புமா செய்யும் பொழுது பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸ் சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
