தேவையான பொருட்கள்
- கடலை மாவு
- மைதா
- மிளகாய் தூள்
- கறி மசாலா தூள்
- சீரகம்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில், 1/4 கப் கடலை மாவு, ஒரு கப் மைதா, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
