தேவையான பொருட்கள்
- முட்டை
- சாதம்
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- இஞ்சி-பூண்டு விழுது
- கறி மசாலா தூள்
- சிக்கன் மசாலா தூள்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- சோம்பு
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், இரண்டு முட்டையை வேக வைத்து, துருவி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 1/2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், துருவி வைத்துள்ள முட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்க்கவும்.
