தேவையான பொருட்கள்
- தக்காளி
- இஞ்சி
- பச்சை மிளகாய்
- மிளகுத்தூள்
- சீரக பொடி
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், மூன்று தக்காளியை 3 நிமிடம் வேக வைத்து, ஆறிய பின் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு ஸ்பூன் இஞ்சி, ஒரு பச்சை மிளகாய், அரைத்து வைத்துள்ள தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ½ ஸ்பூன் சீரக பொடி, தேவையான அளவு உப்பு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
