தேவையான பொருட்கள்
- தயிர்
- வெந்தயம்
- பூண்டு
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
- கடுகு
- காய்ந்த மிளகாய்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் வெந்தயம், ஆறு பல் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின், அடுப்பை மெதுவாக வைத்து, ஒரு கப் புளிக்காத தயிர், ¼ கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தவும்.
பின்னர், மற்றொரு கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து தயார் செய்து வைத்துள்ள குழம்பில் சேர்க்கவும்.
