தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு
- தேங்காய்
- சாம்பார் தூள்
- மிளகாய் தூள்
- உப்பு
- கடுகு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், ஒரு கப் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை வேக வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ¼ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, ஒரு ஸ்பூன் சாம்பார் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கலந்துவிடவும்.
இறுதியாக, ¼ கப் துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் கலந்துவிட்டு இறக்கவும்.
