தேவையான பொருட்கள்
- மோர்
- பச்சை மிளகாய்
- இஞ்சி
- மஞ்சள் தூள்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், ஒரு கப் மோரில் ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில், மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய ¼ ஸ்பூன் இஞ்சி சேர்த்து தாளிக்கவும்.
பின், அடுப்பை மெதுவாக வைத்து, தயார் செய்து வைத்துள்ள மோர் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தவும்.
