தேவையான பொருட்கள்
- சாதம்
- கருவாடு
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- மிளகாய் தூள்
- மிளகுத்தூள்
- பூண்டு
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், 100 கிராம் சின்ன கருவாட்டை கழுவி லேசாக எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஐந்து பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ½ ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின், தயார் செய்து வைத்துள்ள கருவாடு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
பின்னர், 1½ கப் சாதம் சேர்த்து நன்கு கலந்துவிட்டு இறக்கவும்.
