தேவையான பொருட்கள்
- கருவாடு
- தக்காளி
- பெரிய வெங்காயம்
- பூண்டு
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- காய்ந்த மிளகாய்
- கடுகு
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், 150 கிராம் கருவாட்டை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஐந்து பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய மூன்று தக்காளி, 1½ ஸ்பூன் மிளகாய் தூள், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின், தேவையான அளவு உப்பு, கருவாடு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
